செய்திகள்
மாயம்

போச்சம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2019-09-13 16:53 GMT   |   Update On 2019-09-13 16:53 GMT
போச்சம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மருதாசலம். இவருக்கு நவீனா (வயது17) என்ற மகள் உள்ளார்.

இவர் பென்னாகரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக நவீனா கூறிச் சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் நவீனா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மருதாசலம் பல இடங்களில் தேடிப்பார்த்தும் நவீனா கிடைக்கவில்லை. 

இதுகுறித்து மருதாசலம் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் எனது மகளை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும் படியும் புகார் செய்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News