அருமனை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
நாகர்கோவில், செப். 13-
அருமனையை அடுத்த அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் குட்டப்பன் (74).
சம்பவத்தன்று வீட்டில் இருந்து பொருட்கள் வாங்கு வதற்காக அருமனை- மேல் புறம் சாலையில் குட்டப் பன் நடந்து சென்று கொண் டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக் கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். எதிர்பாராத விதமாக அந்த வாலிபர் குட்டப்பன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந் தார்.
இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் ஆகி யோர் விசாரணை மேற் கொண்டனர். அதில் மோட் டார் சைக்கிளை ஓட்டி வந்தது களியல் பகுதியை சேர்ந்த சுனில் (27) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சுனில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.