செய்திகள்
சீல் வைக்கப்பட்ட அச்சகம்

பேனர் விழுந்து இளம்பெண் பலி- அச்சகத்திற்கு சீல் வைப்பு

Published On 2019-09-13 05:15 GMT   |   Update On 2019-09-13 05:15 GMT
சென்னையில் இளம்பெண் மரணத்திற்கு காரணமான பேனரை அச்சடித்த அச்சகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை:

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ (23 வயது), என்ற இளம்பெண் நேற்று பள்ளிக்கரணையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமாக இருந்த பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளபோதிலும், நிலைமை இன்னும் மாறவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

எனவே, பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைப்பதை அதிகாரிகள் கண்காணித்து, உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News