செய்திகள்
கைது

பொள்ளாச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

Published On 2019-09-13 03:59 GMT   |   Update On 2019-09-13 03:59 GMT
பொள்ளாச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி மீன்கரை சாலையில் வசித்து வருபவர் பக்திராஜ் (65) கூலித் தொழிலாளி. கடந்த 11-ந் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியின் தாய் அச்சிறுமியை வீட்டில் தனியாக விட்டு விட்டு அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட பக்திராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அச்சிறுமி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதனை பார்த்ததும் பக்திராஜ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். கடைக்கு சென்று திரும்பிய சிறுமியின் தாய் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்தி ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 6 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News