செய்திகள்
கைது

புதுவை ஓட்டல்களில் விபசாரம்: 8 பெண்கள் மீட்பு, 16 பேர் கைது

Published On 2019-09-12 12:02 GMT   |   Update On 2019-09-12 12:02 GMT
புதுவை ஓட்டல்களில் மேற்கு வங்க அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியதில் 8 பெண்கள் மீட்கப்பட்டனர். 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவாவுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் (பொறுப்பு) தலைமையில் நேற்று இரவு புதுவை ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிரடிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், புரோக்கர்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-

புதுவை காமராஜர் சாலை பிருந்தாவனம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நடத்திய சோதனையில் விழுப்புரம் பாண்டியன், தட்டாஞ்சாவடி சுப்பையாநகர் ரவிசங்கர் (45), நெல்லித்தோப்பு அருள் படையாட்சி வீதி சிவசங்கர் (34), கருணாகரன் (40), புதுவை ராஜாநகர் ஜான்பால் (37) ஆகிய 6 பேரை கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அரும்பார்த்தபுரம் நேரு வீதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டனர். மேலும் விபசாரம் நடத்திய உருளையன்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலுமணி (68), தேங்காய்திட்டு புதுநகர் ராஜேஷ் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள தனியார் ரெசிடென்சியில் நடத்திய அதிரடி சோதனையில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வடலூரை சேர்ந்த செல்வம் (38), தேங்காய்திட்டு அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (31), ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பாலமுருகன் (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய காஞ்சிபுரத்தை சேர்ந்த டெல்லிபாபு (43), முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் (41), கரசூரை சேர்ந்த செல்வம் (26), துரைராஜ் (37) மற்றும் சென்னையை சேர்ந்த சுந்தர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விபசாரத்தில் ஈடுபட்டு மீட்கப்பட்ட 8 பெண்களில் 4 பெண்கள் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்கள் புதுவை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களை விபசார புரோக்கர்கள் ஒப்பந்த அடிப்படையில் புதுவைக்கு அழைத்து வந்து அதாவது ஒரு பெண் 3 நாட்களுக்கு 10 ஆண் வாடிக்கையாளர்களுடன் விபசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும், அந்த பெண்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்தி அழைத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மீட்கப்பட்ட 17 வயது இளம்பெண் கல்லூரி மாணவி என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News