செய்திகள்
கைது

கோவையில் காரை அடமானம் வைத்து மோசடி- 2 பேர் கைது

Published On 2019-09-12 09:51 GMT   |   Update On 2019-09-12 09:51 GMT
கோவையில் காரை அடமானம் வைத்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் அலாவுதீன் (34). உக்கடத்தை சேர்ந்த அசாருதீன் (32). இவர்கள் 2 பேரும் கார் வாங்கி அடமானம் வைத்து மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் சரவணம்பட்டி பகுதியில் நடந்த மோசடி தொடர்பாக அலாவுதீன், அசாருதீன் ஆகியோரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகர பகுதிகளில் பஸ் நிலையம் மற்றும் அதிகம் மக்கள் கூடும் இடங்களில் அதிக அளவில் செல்போன் திருட்டு போவதாக போலீசில் புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து செல்போன் திருடர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் 17 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News