செய்திகள்
கிருமாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதல்: 2 பேர் படுகாயம்
கிருமாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில் கணவன்- மனைவி படுகாயம் அடைந்தனர்.
பாகூர்:
புதுவை அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 56). கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி (55). கிருமாம்பாக்கம் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 8-ந் தேதி இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் கிருமாம்பாக்கம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது புதுவையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பால் வேன் அவர்கள் மீது மோதியது.
இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவை அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 56). கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி (55). கிருமாம்பாக்கம் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 8-ந் தேதி இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் கிருமாம்பாக்கம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது புதுவையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பால் வேன் அவர்கள் மீது மோதியது.
இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.