செய்திகள்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார்.
திருச்சி:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். பின்னர் திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை செல்லும் கவர்னர். அங்கு நடைபெறும் கலாசார விழாவில் பங்கேற்கிறார். அதன் பிறகு மீண்டும் கார் மூலம் திருச்சி வந்து, இரவு 8 மணி அளவில் விமானத்தில் சென்னை செல்கிறார்.
கவர்னர் வருகையையொட்டி திருச்சி விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.