செய்திகள்
கைது

கடையம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2019-09-09 14:34 GMT   |   Update On 2019-09-09 14:34 GMT
கடையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
கடையம்:

கடையம் அருகே உள்ள புங்கம்பட்டியில் கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து டிராக்டர்களை ஓட்டிவந்த புங்கம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த ராமர் (44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மணல் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News