செய்திகள்
பொதுக்கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசிய காட்சி.

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பா.ஜனதாவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Published On 2019-09-09 12:22 GMT   |   Update On 2019-09-09 12:22 GMT
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பா.ஜனதா அரசின் “பொருளாதார” சீர்கேட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை:

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பா.ஜனதா அரசின் “பொருளாதார” சீர்கேட்டை கண்டித்தும், மத்திய அரசின் பழிவாங்கும் ஜனநாயக அடக்கு முறையாக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் போஸ்ச்சிஸ் ரோடு, ஜாயின்ட் ஆபிஸ் அருகில் நேற்று நடைபெற்றது. சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.

வில்லிவாக்கம் பி.கணபதி, வில்லிவாக்கம் டி.சுரேஷ், வில்லிவாக்கம் எம்.ஐயப்பன், டிராவல்ஸ் யு.ராஜேஷ், அயன்புரம் கே.சரவணன், எஸ்.மோகனரங்கம், எம்.பி.சம்பத்குமார், எஸ்.எம்.கமல், ஜி.வாஞ்சிநாதன், ஆர்.கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். ஜி.கோதண்டன், டி.ராமமூர்த்தி, ஏ.ஆனந்தராம் வரவேற்றனர். பீட்டர் அல்போன்ஸ், டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி., டி.யசோதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நளினி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பொன்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஹசீனாசையது, ஜி.பி.மோகன்காந்தி, ஜெ. ரகுநாத், எஸ்.தினேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் வி.விஜய், வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News