செய்திகள்
மதுரையில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

மதுரையில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

Published On 2019-09-07 08:10 GMT   |   Update On 2019-09-07 08:10 GMT
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

மதுரை:

நெல்லை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட தி.மு.க. இளைஞரணியில் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக மதுரையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நிர்வாகிகளை சந்தித்து நேர்காணல் நடத்தினார்.

மதுரை பைபாஸ் ரோடு, தங்கம் கிராண்ட் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.

இதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் மதுரை நாராயணபுரத்தில் தி.மு.க. இளைஞர் அணியினர் குளத்தை தூர்வாரி கரையை மேம்படுத்தி நடைபாதை அமைத்துக் கொடுத்ததை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Tags:    

Similar News