செய்திகள்
செயின் பறிப்பு

வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் கத்தியை காட்டி செயின் பறிப்பு

Published On 2019-09-04 16:30 GMT   |   Update On 2019-09-04 16:30 GMT
கிருஷ்ணகிரியில் வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் கத்தியை காட்டி 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் உள்ள ராஜாஜி நகர் 6-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்(34), இவரது மனைவி அனிதா, இவர் நேற்று தனது வீட்டுமுன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த நபர் முகவரி கேட்ப்பதுபோல் அனிதா அருகே வந்து அவர் கழுத்தில் கத்தி வைத்து 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பியோடி உள்ளான். பின்னர் இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசில் சவுந்தர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குபதிவுசெய்து செயின் திருடனை தேடி வருகிறார்.
Tags:    

Similar News