செய்திகள்
தற்கொலை

மெலட்டூர் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

Published On 2019-09-02 12:41 GMT   |   Update On 2019-09-02 12:41 GMT
மெலட்டூர் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மெலட்டூர்:

பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே உள்ள கோவத்தக்குடி மாதா கோவில் தெருவை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 60). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடன் தொல்லையால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பால்ராஜ் பூச்சி மருந்தினை குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதுதொடர்பாக மெலட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து பால்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News