செய்திகள்
தேனி அருகே கடன் தொல்லையால் தச்சு தொழிலாளி தற்கொலை
தேனி அருகே கடன் தொல்லையால் தச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே அல்லிநகரம் வெங்கலாகோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது55). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களை படிக்க வைக்க பல்வேறு இடங்களில் சேகர் கடன் வாங்கி உள்ளார்.
தற்போது கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். மேலும் தனது மகள்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்பது குறித்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டிலேயே தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.