செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜனுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் - ஜி.கே. வாசன் வாழ்த்து
தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நாகர்கோவிலில் கூறியதாவது:-
மக்கள் வழி, இயக்க பணி என்று இரண்டுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து மிகப்பெரிய அளவில் மக்கள் பணியாற்றி வருபவர் தமிழிசை சவுந்தரராஜன். அவர் சார்ந்த இயக்கம் வளர கடினமாக உழைப்பவர். அவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் நகரம் முதல் கிராமம் வரை சென்றடைய பணியாற்றி வருகிறார். அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. தெலுங்கானா கவர்னராக பதவியேற்க உள்ள அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
5 ஆண்டுகளாக தமிழக பா.ஜனதா தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். அவரது சேவையை பாராட்டி தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இந்த அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நாகர்கோவிலில் கூறியதாவது:-
மக்கள் வழி, இயக்க பணி என்று இரண்டுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து மிகப்பெரிய அளவில் மக்கள் பணியாற்றி வருபவர் தமிழிசை சவுந்தரராஜன். அவர் சார்ந்த இயக்கம் வளர கடினமாக உழைப்பவர். அவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் நகரம் முதல் கிராமம் வரை சென்றடைய பணியாற்றி வருகிறார். அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. தெலுங்கானா கவர்னராக பதவியேற்க உள்ள அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.