செய்திகள்
முதல்வர் பழனிசாமி

நாளை விநாயகர் சதுர்த்தி - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Published On 2019-09-01 05:43 GMT   |   Update On 2019-09-01 05:43 GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில், விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள். விநாயகப் பெருமானின் அவதார தினத்தில், வீடெங்கும் மகிழ்ச்சியும் அன்பும் நிறையட்டும், நலமும், வளமும் பெருகட்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News