செய்திகள்
மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த கூலி தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேத்துப்பட்டு:
தேசூரை அடுத்த பொன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வெடால் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மீண்டும் பொன்னூருக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார்சைக்கிளிலிருந்து கீழே தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேசூரை அடுத்த பொன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வெடால் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மீண்டும் பொன்னூருக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார்சைக்கிளிலிருந்து கீழே தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.