செய்திகள்
நல்லம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயம்
நல்லம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கழனிகாட்டூரைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது50). இவரது மனைவி பூவியம்மாள். இவர்களுக்கு 3 மகன்களும், கவிதா (17) என்ற மகளும் உள்ளனர். இதில் கவிதா தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டைவிட்டு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் கவிதா வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன கவிதாவின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கவிதா மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து முனுசாமி அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.