செய்திகள்
சாரல் மழை - பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சாரல் மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
கேரளாவில் கன மழை பெய்தபோதும் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பொழிவு இல்லை. இதனால் 131 அடிக்கு மேல் நீர்மட்டம் உயராமலேயே உள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.35 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1115 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1625 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 52.30 அடியாக உள்ளது. 1230 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.13 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 38, தேக்கடி 10.6, கூடலூர் 1.2. சண்முகாநதி அணை 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கேரளாவில் கன மழை பெய்தபோதும் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பொழிவு இல்லை. இதனால் 131 அடிக்கு மேல் நீர்மட்டம் உயராமலேயே உள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.35 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1115 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1625 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 52.30 அடியாக உள்ளது. 1230 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.13 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 38, தேக்கடி 10.6, கூடலூர் 1.2. சண்முகாநதி அணை 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.