செய்திகள்
கேஆர்எஸ் அணை

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

Published On 2019-08-26 06:35 GMT   |   Update On 2019-08-26 06:35 GMT
கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைகளில் இருந்து மொத்தம் 8 ஆயிரத்து 151 கன அடி தண்ணீர் தமிழகத்திற்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது.
தர்மபுரி:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர் மட்டம் 124.80 அடி ஆகும். இதில் 124.80 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 105 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 5 ஆயிரத்து 151 கனஅடி வீதம் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கபினி அணையின் மொத்த நீர் மட்டம் 84 அடி ஆகும். அணையில் 83.81 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 298 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

2 அணைகளில் இருந்தும் இன்று மொத்தம் 8 ஆயிரத்து 151 கன அடி தண்ணீர் தமிழகத்திற்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News