செய்திகள்
தற்கொலை

திருச்செந்தூர் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2019-08-25 16:59 GMT   |   Update On 2019-08-25 16:59 GMT
திருச்செந்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டினம் பிரசாந்த் நகரை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இவரது மனைவி முத்துஜெயா (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.  இவர்கள் கூட்டுக்குடும்பமாக  வசித்து வந்தனர்.  

இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் வீரபாண்டிய பட்டினம் பிலோமி நகரில் தனிக்குடித்தனம் சென்றனர். 

இந்நிலையில் முத்துஜெயா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் போலீசார் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.  

திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் இது தொடர்பாக திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

முத்துஜெயாவின் தாயார் அழகு சுந்தரி சாவில் மர்மம் இருப்பதாக கூறி திருச்செந்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Tags:    

Similar News