செய்திகள்
தற்கொலை

சாத்தான்குளம் அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

Published On 2019-08-25 16:52 GMT   |   Update On 2019-08-25 16:52 GMT
சாத்தான்குளம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுன்னாகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் என்ற லெட்சுமி(வயது 55). இவரது கணவர் பேச்சுமுத்து கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன் சித்திரை குட்டி நயினார்(29). சென்னையில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று காலை செல்லம்மாள் வேலைக்காக வெளியே சென்றிருந்தார். வீட்டில் சித்திரை மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டவர் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாலையில் செல்லம்மாள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் சித்திரை உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர். இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News