செய்திகள்
பொன்னேரியில் கடைபூட்டை உடைத்து பணம் கொள்ளை
பொன்னேரியில் கடைபூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பரிக்கபட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பொன்னேரி அருகே உள்ள மேட்டுக் காலனி தச்சூர் சாலையில் ஜெராக்ஸ் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.
இன்று காலை கடை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.
கடையில் இருந்த ரூ.10 ஆயிரம், ரேடியோ செட், மொபைல் போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.