செய்திகள்
கைது

பூ வியாபாரிக்கு கத்தரிக்கோல் குத்து - தொழிலாளி கைது

Published On 2019-08-24 09:30 GMT   |   Update On 2019-08-24 09:30 GMT
சுப்பிரமணியபுரத்தில் பூ வியாபாரியை கத்தரிக்கோலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:

மதுரை சுப்பிரமணியபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சரவணக்குமார் (வயது 24). இவர் பைக்காராவில் பூக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடை அருகே பாண்டி (42) என்பவரும் பூக்கடை வைத்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் தொழில் போட்டி உள்ளது. சம்பவத்தன்று சரவண குமாரின் தந்தை கடையில் பூ கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பாண்டி, முன் விரோத தகராறில் கத்தரிக்கோலால் குத்திவிட்டு தப்பி ஓடினார். பலத்த காயமடைந்த சரவணகுமாரின் தந்தை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில், சரவணகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர்.


Tags:    

Similar News