நெற்குன்றத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
நெற்குன்றம்:
நெற்குன்றம் அடுத்த பெரியார் நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சயித் முகமது. இவரது மகன் ஆதாம் (26). இவர் மன நலம் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆதாம் திடீரென்று எழுந்து சமையலறைக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த கத்தியை எடுத்து கொண்டு கழிவறைக்கு சென்று கதவை உள்பக்கம் பூட்டிக்கொண்டார். பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, தந்தை சயித் ஓடி வந்து கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ஆதாம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆதாம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.