செய்திகள்
விபத்து

தூத்துக்குடியில் லாரி மோதி டிரைவர் பலி

Published On 2019-08-23 14:06 GMT   |   Update On 2019-08-23 14:06 GMT
தூத்துக்குடியில் லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள நயினார்புரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 40). லாரி டிரைவரான இவர் நேற்று இரவு தான் ஓட்டி வந்த லாரியை மடத்தூர் பகுதியில் நிறுத்தி, சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் நின்ற மற்றொரு லாரியின் டிரைவர் கமாலூதீன், முத்துராஜ் நிற்பதை கவனிக்காமல் தனது லாரியை பின்பக்கமாக ஓட்டிவந்தார். இதில் முத்துராஜ் மீது லாரி மோதியது. படுகாயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நள்ளிரவில் முத்துராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News