புதுச்சேரி அருகே டெம்போ டிரைவர் மயங்கி விழுந்து பலி
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி ஞானுதியாகுநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது41), டெம்போ டிரைவர். இவருக்கு ராதா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். குடிப்பழக்கத்தினால் கடந்த சில மாதத்திற்கு முன்பு பாண்டியனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் கடந்த சில நாட்களாக மதுகுடிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் பாண்டியன் மீண்டும் மது குடிக்க ஆரம்பித்தார். இதனால் அவருக்கு உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாண்டியனை சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் நேற்று கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரி வாயிலில் சென்ற போது பாண்டியன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.