திண்டுக்கல் அருகே மன நிலை பாதித்த பெண்ணை கர்ப்பிணியாக்கிய கொடுமை
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர். தாய் இறந்து விட்டதால் தந்தை பராமரிப்பில் இருந்து வந்தார். தந்தை உடல் நிலை சரி இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக சாந்தி வயிறு வலிப்பதாக கூறி வந்தார். அவர்கள் வயிற்று வலிக்கு மருந்து கொடுத்து வந்துள்ளனர். இருந்தபோதும் தொடர்ந்து வலி இருப்பதாக கூறி வந்ததால் அவரது தங்கை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் சாந்தி 8 மாத கர்ப்பிணியாக இருந்ததாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் சாந்தி தொடர்ந்து வயிறு வலிப்பதாக கூறி வருகிறார்.
இதனால் அவரை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மன நிலை பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பிணியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.