செய்திகள்
மரணம்

திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2019-08-23 09:51 GMT   |   Update On 2019-08-23 09:51 GMT
திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அடுத்த வைத்தியநாதன்பேட்டை கடைத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மணிகண்டன்(வயது27). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்தார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.

இவர் நேற்று மாலை வீட்டின் மாடியில் மழை தண்ணீர் தேங்கியிருந்ததை வெளியேற்றி கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கிருந்த எர்த் கம்பியில் எதிர்பாரதவிதமாக கைபட்டதில் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இது குறித்து மருவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News