செய்திகள்
கைது

16 வயது சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி போக்சோ சட்டத்தில் கைது

Published On 2019-08-22 16:30 GMT   |   Update On 2019-08-22 16:30 GMT
கோவையில் 16 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த பிரபல ரவுடியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை புலியகுளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் என்கிற ஜோஸ்வா(வயது 24). இவர் மீது 3 கொலை வழக்குகள், வழிப்பறி, அடிதடி உள்பட 27 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஜோஸ்வா கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது சிறுமியை கடத்தி கற்பழித்து விட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். 

இந்த நிலையில் அவர் புலியகுளம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் ஜோஸ்வா தப்பி ஓட முயன்றார். இதில் கீழே விழுந்த அவருக்கு இடது கால் முறிந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News