செய்திகள்
தற்கொலை

சுரண்டை அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2019-08-21 15:56 GMT   |   Update On 2019-08-21 15:56 GMT
சுரண்டை அருகே வேலைக்கு செல்லாத கணவரை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சுரண்டை:

சேர்ந்தமரம் அருகே உள்ள கரடிகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 42), கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடையநல்லூரில் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கரடிகுளத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திருமலாபுரம் மலை கோவில் அருகே வந்துள்ளார். பின்னர் அங்கு வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்த நாள் காலை அவ்வழியாக சென்றவர்கள் சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் முருகன் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதேபோல் சேர்ந்தமரம் இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் வீரப்பன்(57),கூலி தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. 

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட வீரப்பனை குடும்பத்தினர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விரு வழக்குகள் குறித்து சேர்ந்தமரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News