செய்திகள்
முக ஸ்டாலின்

மேல்சபை உறுப்பினராக தேர்வு: மன்மோகன்சிங்குக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

Published On 2019-08-21 11:38 GMT   |   Update On 2019-08-21 11:38 GMT
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது.-

மன்மோகன்சிங் மீண்டும் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டதற்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய அனுபவம், தலைமை பண்பு, அறிவுத்திறன் ஆகியவற்றால் நாடும், பாராளுமன்றமும் வரும் ஆண்டுகளில் சிறந்த பயன்களை பெறும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Tags:    

Similar News