செய்திகள்
மேல்சபை உறுப்பினராக தேர்வு: மன்மோகன்சிங்குக்கு முக ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறி இருப்பதாவது.-
மன்மோகன்சிங் மீண்டும் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டதற்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய அனுபவம், தலைமை பண்பு, அறிவுத்திறன் ஆகியவற்றால் நாடும், பாராளுமன்றமும் வரும் ஆண்டுகளில் சிறந்த பயன்களை பெறும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.