செய்திகள்
தற்கொலை

சாத்தூரில் தீக்குளித்து மாணவி பலி

Published On 2019-08-20 10:03 GMT   |   Update On 2019-08-20 10:03 GMT
பெற்றோர் குடும்ப தகராறில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்:

சாத்தூர் தென்வடல் புதுத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் இசக்கியம்மாள் (வயது 17). பிளஸ்-1 படித்து வந்தார்.

மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை மகள் இசக்கியம்மாள் தீர்த்து வந்தார்.

நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் இசக்கியம்மாள் மன வேதனை அடைந்தார். வீட்டின் அறைக்குள் சென்ற அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் உடல் கருகிய இசக்கியம்மாளை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிவகாசி தீக்காய தடுப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News