செய்திகள்
வில்லியனூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
வில்லியனூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உருவையாறு வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 23). கட்டிட தொழிலாளி. நேற்று இவர் வீட்டுக்கு தண்ணீர் வசதிக்காக புதிதாக மின் மோட்டாரை வாங்கி வந்தார்.
பின்னர் மோட்டாருக்கு அவரே இணைப்பு கொடுத்து மோட்டாரை இயக்கி பார்க்க சுவிட்ச் போர்டில் பிளக்கை சொறுகினார்.
அப்போது எதிர்பாராத விதமாக விஜய்யை மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்ட விஜய் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வில்லியனூர் அருகே உருவையாறு வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 23). கட்டிட தொழிலாளி. நேற்று இவர் வீட்டுக்கு தண்ணீர் வசதிக்காக புதிதாக மின் மோட்டாரை வாங்கி வந்தார்.
பின்னர் மோட்டாருக்கு அவரே இணைப்பு கொடுத்து மோட்டாரை இயக்கி பார்க்க சுவிட்ச் போர்டில் பிளக்கை சொறுகினார்.
அப்போது எதிர்பாராத விதமாக விஜய்யை மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்ட விஜய் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.