செய்திகள்
கைது

மதுரையில் விடுதியில் விபசாரம்- செல்போன்களுடன் பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது

Published On 2019-08-19 16:01 GMT   |   Update On 2019-08-19 16:01 GMT
விடுதியில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகளை மீட்ட போலீசார், பெண் புரோக்கர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
மதுரை:

மதுரை டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பம் பகுதியில் பல்வேறு விடுதிகள் உள்ளன. இதில் ஒரு விடுதியில் பெண்களை வைத்து சிலர் பாலியல் தொழில் செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து திடீர் நகர் போலீசார் குறிப்பிட்ட விடுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அதில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை போலீசார் மீட்டனர்.

தொடர்ந்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் ராஜபாளையம் சீனிவாசன் (வயது 47), திருமங்கலம் கிருஷ்ணாநகர் ராம்குமார் மனைவி சங்கீதா பாப்பா (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 செல் போன்கள் மற்றும் ரூ. 12 ஆயிரத்து 270 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News