செய்திகள்
தீக்குளிப்பு

திருநாவலூர் அருகே வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தீக்குளிப்பு

Published On 2019-08-19 13:20 GMT   |   Update On 2019-08-19 13:20 GMT
திருநாவலூர் அருகே புல் அறுக்க சென்ற இளம்பெண்ணை வாலிபர் பலாத்காரம் செய்ததில் மனமுடைந்த அவர் தீக்குளிப்பு தற்கொலை செய்து கொண்டார்.

திருநாவலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு புல் அறுக்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஷாருக்கான் (22) என்பவர் பின் தொடர்ந்து சென்றார்.

பின்னர் திடீர்ரென அவர் அந்த பெண்ணின் வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதன்பின்னர் வீட்டுக்கு வந்த அந்த பெண் மனவேதனை அடைந்தார். தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து அந்த பெண் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் கருகிய அவர் அலறித்துடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடல்கருகிய அந்த பெண்ணை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருநாவலுர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எழிலரசி வழக்குப்பதிந்து வாலிபர் ஷாரூக்கானை கைது செய்தனர். ஷாருக்கான் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News