செய்திகள்
மழையில் செல்லும் வாகனங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை

Published On 2019-08-18 02:40 GMT   |   Update On 2019-08-18 02:40 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்தது.

சென்னையின் புறநகர் பகுதிகளான போரூர், ராமாபுரம், வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

இதேபோல், தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. 
Tags:    

Similar News