செய்திகள்
ஆவின் பால்

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - அரசு அறிவிப்பு

Published On 2019-08-17 13:21 GMT   |   Update On 2019-08-17 13:21 GMT
ஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: 

தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. நுகர்வோர்களுக்கு தரமான பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

பசும்பால் விலை கொள்முதல் விலை 4ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு லிட்டர் விலை 32 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எருமைப்பால் விலை கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் விலை 41 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும். இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News