செய்திகள்
காதல் கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காதல் கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டிணம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி நித்யா (வயது 22).
இவர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை.
இந்தநிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் சிலம்பரசன் இறந்தார். காதல் கணவர் இறந்ததால் நித்யா மிகுந்த மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட நித்யாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.