செய்திகள்
தற்கொலை

சேலம் பெரமனூரில் நடுரோட்டில் இளம்பெண் தற்கொலை

Published On 2019-08-16 04:58 GMT   |   Update On 2019-08-16 04:58 GMT
சேலம் பெரமனூரில் நடுரோட்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் பெரமனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது33). இவருக்கும் அழகாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனலெட்சுமி பெற்றோர் வீட்டிற்கு வந்தார். நேற்றிரவு தந்தை வீட்டில் தூங்கிய தனலெஷ்மி நள்ளிரவில் கண் விழித்தார். பின்னர் கதவை வெளியில் பூட்டிய அவர் வீட்டு முன்புள்ள சாலையில் நின்று கொண்டு உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

தீ உடல் முழுவதும் மளமளவென பரவியதால் வலியால் அலறி துடித்த அவர் சாலையில் அங்கும், இங்கும் ஓடினார். அவரது சத்தம் கேட்டு வெளியில் வந்த உறவினர்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். ஆனாலும் அவர் உடல் முழுவதும் கருகியதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News