செய்திகள்
மணல் கடத்தல்

போடி அருகே மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2019-08-15 09:20 GMT   |   Update On 2019-08-15 09:20 GMT
போடி அருகே மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே சிலமலை சூளப்புரம் பகுதியில் மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தவண்ணம் உள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சூளப்புரம் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 மாட்டு வண்டிகளில் மணல் கடத்திவந்தது போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். இதனைதொடர்ந்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News