செய்திகள்
கொலை

மதுரை மதிச்சியத்தில் தொழிலாளி சரமாரி வெட்டி கொலை - 3 வாலிபர்கள் கைது

Published On 2019-08-14 10:27 GMT   |   Update On 2019-08-14 10:27 GMT
மதுரை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்டார். 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35) சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் மகள் அந்தப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அகிம்சா புரத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் (23), மதிச்சியம் மீனாட்சிசுந்தரம் (22), மாரிமுத்து (23) ஆகியோர் கேலி-கிண்டல் செய்துள்ளனர். இதனை அவர் கண்டித்தார். ஆனாலும் 3 பேரும் தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனது தந்தையிடம் தெரிவித்தார். உடனே மணிகண்டன் 3 பேரையும் கண்டித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு மணிகண்டன் மதிச்சியம் பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த உமாமகேஸ்வரன், மீனாட்சி சுந்தரம், மாரிமுத்து ஆகியோர் மணிகண்டனை ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். மதிச்சியம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

மகளை கேலி செய்தவர் களை தட்டிக்கேட்டதால் தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News