செய்திகள்
விபத்து

திருவண்ணாமலையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

Published On 2019-08-13 07:41 GMT   |   Update On 2019-08-13 07:41 GMT
திருவண்ணாமலையில் கார்-லாரி நேருக்கு நேராக மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்னாமலையில் அய்யம்பாளையம் பகுதிக்கு அருகே கர்நாடகாவுக்கு கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதில் 2 பெண் உட்பட 5 பேர் பயணம் செய்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி, நேருக்கு நேராக கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
Tags:    

Similar News