தூத்துக்குடி அருகே வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு துலுக்கன்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சிவராமன் (வயது 22). இவரது நண்பர் வாகைகுளத்தை சேர்ந்த தெய்வரசன்குமார் ஆவார். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று கூட்டாம்புளி அருகே கபடி போட்டி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் அங்கு தெய்வரசன்குமார் கபடி போட்டி பார்த்து கொண்டு இருந்துள்ளார்.
சிவராமன் மட்டும் தனியாக வடக்கு துலுக்கன்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அவர் வாகைகுளம் தனியார் கல்லூரி அருகே வரும்போது பைக்கில் வந்த 3 பேர் சேர்ந்த கும்பல் வழிமறித்தது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து சிவராமனை தாக்கி செல்போனை பறித்து கொண்டு சென்றனர். செல்போனின் மதிப்பு ரூ.11 ஆயிரம் என கூறப்படுகிறது.
இது குறித்து சிவராமன் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள்.