செய்திகள்
கர்ப்பம்

தஞ்சை அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்த வாலிபர்

Published On 2019-08-12 09:58 GMT   |   Update On 2019-08-12 09:58 GMT
ஆசை வார்த்தை கூறி காதலியை கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த ராமாபுரம் அருகே உள்ள தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தோட்டக்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் நீலகண்டன் (28). இவர் தஞ்சை அருகே உள்ள வயலூரில் உள்ள குடிநீர் சப்ளை சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நீலகண்டனும், தேவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனை பயன்படுத்தி கொண்ட நீலகண்டன் தேவியிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து அவரிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் அப்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தேவி நீலகண்டனிடம் கூறி உள்ளார். இந்நிலையில் நீலகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இதுபற்றி அறிந்த தேவி வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து வல்லம் போலீசார் நீலகண்டனை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேல் விசாரணைக்காக மறுநாள் வருவதாக சொல்லி விட்டு சென்ற நீலகண்டன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.

இதனையடுத்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் நீலகண்டன் மீது கற்பழிப்பு வழக்குபதிவு செய்து தலைமறைவான நீலகண்டனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News