செய்திகள்
பொள்ளாச்சி அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல்
பொள்ளாச்சி அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த நிறுவனத்திற்கு தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பொள்ளாச்சி:
தமிழக அரசு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது.
இந்த தடையை மீறி பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி ரங்க சமுத்திரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக பொள்ளாச்சி ஆர்.டி.ஓ.ரவிக்குமாருக்கு தகவல் வந்தது.இது குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தாசில்தார் தணிகைவேல் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். இதன் உரிமையாளர் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த அருண் ஆவார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ரங்கசமுத்திரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தற்போது மேலும் ஒரு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது.
இந்த தடையை மீறி பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி ரங்க சமுத்திரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக பொள்ளாச்சி ஆர்.டி.ஓ.ரவிக்குமாருக்கு தகவல் வந்தது.இது குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தாசில்தார் தணிகைவேல் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். இதன் உரிமையாளர் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த அருண் ஆவார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ரங்கசமுத்திரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தற்போது மேலும் ஒரு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.