செய்திகள்
வைகோ

வைகோவுக்கு சால்வை அணிவிக்க கூடாது- மதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

Published On 2019-08-08 06:16 GMT   |   Update On 2019-08-08 06:16 GMT
வைகோவுக்கு சால்வை அணிவிக்க கூடாது என்றும் அதற்கு பதிலாக கழகத்திற்கு நிதி வழங்கலாம் என்றும் மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கழகப் பொதுச்செயலாளருக்கு, கழகத் தோழர்கள் இனி யாரும் சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக கழகத்திற்கு நிதி வழங்கலாம்.

கழகப் பொதுச்செயலாளருடன் முகப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் நிதியாக ரூ.100 வழங்க வேண்டும். கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News