செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

சிறுகனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2019-08-07 09:48 GMT   |   Update On 2019-08-07 09:48 GMT
சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட சிறுகனூர் துணை மின்நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதையொட்டி அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சிறுகனூர், சி.ஆர்.பாளையம், திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், வாலையூர், சனமங்கலம், மணியங்குறிச்சி, ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், நெய்குளம், நெடுங்கூர், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், ஆவாரவள்ளி, சீதேவிமங்கலம் மற்றும் கூத்தனூர் ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News