செய்திகள்
தற்கொலை

கோவை அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-08-07 09:44 GMT   |   Update On 2019-08-07 09:44 GMT
கோவை அருகே மனைவி கண்டித்ததால் மனவேதனை அடைந்த டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரத்னபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை ரத்னபுரி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது40). டிரைவர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு சரிவர செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரத்னபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை சுந்தராபுரம் செங்கப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(24). இவரது தந்தை கடந்த 4 வருடத்திற்கு முன் இறந்து விட்டார். தந்தை இறந்தது முதல் கார்த்திக் மனம் உடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சுந்தராபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ்(49). கட்டிடத் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டு மொட்டைமாடியில் மது போதையில் நின்றிருந்தார். அப்போது திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News