செய்திகள்
சுஷ்மா சுவராஜ் மறைவு - எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இரங்கல்
முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் (67), நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுஷ்மா ஸ்வராஜின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே பேரிழப்பாகும். அவர் பெண்களுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்தார். சுஷ்மா ஸ்வராஜ் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்
இதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டு மக்கள் மீது பேரன்பு கொண்ட சுஷ்மா சுவராஜை இழந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
=========